இந்தப் புழு, கல்லைச் தின்று செரிமானம் அடைந்த பின்னர், மணல் துகள்களாக வெளியேற்றும் அசுரப் புழு என்று, விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
மரக்கப்பல்கள், படகுகளின் அடிப்பகுதியை உண்டு செறிக்கும் கப்பற் புழு வகையைச் சேர்ந்த இந்தப் புழு, மரத்திற்கு பதில் கல்லையே உண்கிறது.
நீருக்கடியில் பாறைகளை மெல்லத் துளையிட்டு குடைந்து உண்ணும் வழக்கம் கொண்டது, லிதோரிடோ அபாடானிகா என்ற புழு. இந்தப் புழு எதற்காக கல்லை உண்கிறது என்று புரியவில்லை என, விஞ்ஞானிகள் சந்தேகம் வெளியிடுகின்றார்கள்.
இந்தப் புழுவின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள், கற்களை ஜீரணிக்க உதவுகின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த நுண்ணுயிரிகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தயாரிக்க உதவுமா? என்ற கோணத்திலும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.