கடத்தல் வழக்கால், கைதாகுவாரா பிக்பொஸ் வனிதா?
SooriyanFM Gossip - கடத்தல் வழக்கால், கைதாகுவாரா பிக்பொஸ் வனிதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து பெற்ற இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் ஜோவிதாவை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்தி சென்று விட்டதாக வனிதா மீது ஆனந்தராஜ் காவல்துறையில் ஆள் கடத்தல் முறைப்பாடு ஒன்றை கொடுக்க, வனிதாவை கைது செய்ய தெலுங்கானா காவல்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மேலும் தற்சமயம் பிக்பொஸ் வீட்டினுள் வனிதா உள்ளதால் பிக்பொஸ் வீடு உள்ள இடத்திற்கே சென்று, காவல்துறையினர் வனிதாவை கைது செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.