அடுத்த மாதமளவில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விண்வெளியில் நடக்க ஆயத்தமாகியுள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.
விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், அடுத்த மாதம் 28 ஆம் திகதி, இந்த விண்வெளி நிலையத்தை நோக்கி, நாசாவின் விஞ்ஞானிகள் சிலர், பயணிக்கவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.