BIGG BOSS தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனங்களிலும் இடம்பிடித்த நடிகை ஓவியா, களவாணி-2 திரைப்படத்தில் நடித்து அந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் பத்திரிகையாளர்களை ஓவியா சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பில் நடிகை ஓவியாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த நடிகை ஓவியாவின் பதில்களும், கேள்விகளும் உங்களுக்காக.....
களவாணி-2 படத்தில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக நடித்துள்ளீர்கள். இது எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான பயிற்சியா....?
சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறீங்களா? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானால் உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.
அரசியலுக்கு வந்தால் கேரள அரசியலில் நுழைவீர்களா?
இல்லவே இல்லை. எனக்கு தமிழ்நாடு தான் எல்லாம். இந்த மாநிலத்தை விட்டு எங்கும் செல்லமாட்டேன். தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை இது. நான் நல்லது செய்வதாக இருந்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். தமிழ் ரசிகர்கள் தான் எனக்கு அதிகம்.
ஒரே மாதிரியான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டவேண்டும். 90 Ml, காஞ்சனா, களவாணி-2 ஆகிய இந்த 3 படங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்ததா? இல்லையே. இனி வரப்போகின்ற எனது அடுத்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக அமைந்துள்ளது. அத்துடன், மலையாளத் திரைப்படம் ஒன்றும் எனது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் எல்லோரும் உங்களது நடவடிக்கைகளை பிரதி செய்ய முயற்சிக்கிறார்களே?
நான் கலந்துகொண்டது பிக்பாஸ் முதல் பாகத்தில். அப்போது எந்த ஐடியாவும் இல்லாமல் சென்றேன். வெளியில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதை செய்தேன். சுதந்திரமாக இருந்தேன்.
அதனால் மக்களுக்கு பிடித்து போனது. இப்போது அப்படி இல்லை. என்னை காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பதிலாக அவர்கள் தமது இயல்பாக இருந்தாலே போதும் என்கிறார் நடிகை ஓவியா.