கடந்த வருடம் டுபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமானார் ஆனால் கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங் ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை அது ஒரு கொலை என கூறியுள்ளார்.
கேரள காவல்துறை மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார்.
உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.
ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் அவரது மரணம் நிச்சயம் விபத்து அல்ல என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார்.
ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது ஏற்க முடியாதது. அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது. அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என உமாடாதன் தெரிவித்ததாக டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.