அமெரிக்காவின்,டென்னிசி மாகாணத்தின் தலைநகர்,நேஷ்வில்லேவில் இருந்து,பிலடெல்பியாவுக்கு, சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் தனது சூட்கேசை வைப்பதற்காக, ‘லக்கேஜ்’ பகுதியை மெல்லத் திறந்துள்ளார்.
பார்த்தவருக்கு அதிர்ச்சி, விமான பணிப்பெண் ஒருவர் உள்ளுக்குள் இருந்துள்ளார்.
பின்னர் அந்தப் பயணி, பணிப்பெண்ணை உடனடியாக கீழே இறங்கச் சொல்லியுள்ளார்.
ஆனால் 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் இறங்க மறுத்து அடம் பிடித்தார். பயணிகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காகத் தான் இவ்வாறு பணிப்பெண் நடந்து கொண்டதாக விமான ஊழியர்கள் ஒருவர் விளக்கமளித்தார்.
இருப்பினும் ,இதனை சகித்துக்கொள்ளாத பயணி ஒருவர், விமானம் தரையிறங்கிய மறுநிமிடமே ,அந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், “வாடிக்கையாளர்களை சிரிக்க வைக்கும் நோக்கிலேயே, இவ்வாறு செய்யப்பட்டது. அவ்வப்போது இதுபோன்ற வேடிக்கைகளில் ஈடுபடுவது நமக்கு வழக்கம்தான்,ஆனால் பயணிகளின் பாதுகாப்பில் நாங்கள் எவ்வித குறையும் வைப்பதில்லை எனக் கூறியுள்ளனர்.