லண்டனை சேர்ந்த 19 வயதான அலானா கட்லாண்ட் என்ற மாணவி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
குறித்த மாணவி தனது கற்றல் தொடர்பில் மேலதிக தேவைக்காக ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நாட்டிற்கு சென்று, அங்கு தனக்கு வேண்டிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர், ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் தான் தங்கியிருந்த பகுதிக்கு திரும்பியுள்ளார்.
மீண்டும் தான் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பிய அந்த மாணவி, சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் விமான கதவை திறந்துள்ளார். குறித்த மாணவியின் இந்த திடீர் செயலால் பயணிகளை மத்தியில் பெரும் பதற்றம் உருவானது.
அத்துடன், கதவு திடீரென திறக்கப்பட்டமையினால் விமானம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது விமானத்திலிருந்து அவர் வெளியே குதிக்க முயன்றுள்ளார்.
ஆனால் உடனடியாக அருகில் இருந்த பயணி ஒருவர் அவரது காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு விமானத்தின் கதவை மூட முயன்றுள்ளார். ஆனால் அதையும் மீறி அலானா கட்லாண்ட் விமானத்தில் இருந்து குதித்து விட்டார்.
இந்த நிலையில் விமானத்தில் இருந்து தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர் எதற்காக விமானத்தில் இருந்து குதித்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அவரை காப்பாற்ற முயன்ற நபர் தெரிவிக்கையில், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.