ஒரு சிறுவனுக்கு 526 பற்களா? என்று உங்களை போலவே பலரும் ஆச்சரியப் பட, சென்னையைச் சேர்ந்த பிரபு தாஸ் என்பவரது மகனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருந்துள்ளது.
குறித்த சிறுவனுக்கு 3 வயது முதல், வாயின் வலதுபக்கத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியர்களை நாடியபோது, சிறுவனுக்கு கீழ் தாடையில் பற்கள் முளைப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கமுடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், 3 வயதில் சிறுவனுக்கு இவ்வாறான சிகிச்சையை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்தமையினால், 7 வயதாகும் சிறுவனுக்கு தற்போதே பல் அகற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது குறித்த சிறுவனின் வாயின் வலது பகுதி முழுவதும் வீங்கி, வலியும் அதிகமாகவே, அறுவை சிகிச்சை செய்யும் பொருட்டு தனியார் மருத்துவனையை பெற்றோர் அணுகினார்கள்.
மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில், அவனுக்கு நூற்றுக்கணக்கான பற்கள் முளைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
பின்னர், 5 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிறுவனின் வாயில் இருந்து சுமார் 526 பற்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், பற்கள் அதிகமாக வளராமல் தடுக்கவும், சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.