இதனால் அதிகளவிலான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் குறித்த சிலையைப் பார்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்து நாட்டின் லோப்புரி மாகாணத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய புத்தர் கோயில், தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, அந்த சிலை வெளியில் தெரிவதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.
தலையில்லாமல் இருக்கும் குறித்த சிலை 13 அடி உயரத்தில் காணப்படுகின்றது. இந்த புத்தர் சிலைக்கு மலர்களால் அலங்கரித்தும், ஊதுபத்திகள் ஏற்றி வைத்தும் மக்கள் வழிபாடுகளை செய்து வருகின்றார்கள்.
இதனிடையே, தாய்லாந்து நாட்டில் நிலவும் வரலாறு காணாத கடும் வறட்சி காரணமாக, 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.