அஜித் ரசிகர்கள் இந்த பட வெளியீடை திருவிழா போல கொண்டாடி வரும் நிலையில் தற்போது முதல் நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் நேர்கொண்ட பார்வை முதல் நாளில் 1.58 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை படம் நேற்று மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது.
நேற்று முதல் நாளில் மட்டும் சென்னையின் பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கில் மொத்தம் 14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாம்.
அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் நேற்று வெளியானது.
உலகம் முழுக்க இருக்கும் தல ரசிகர்கள் படத்தை கொண்டாடிவருகிறார்கள். நல்ல விமர்சனங்களை பெற்று சிறந்த வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. பெண்களுக்கான நீதி பற்றி படத்தில் பேசப்பட்டுள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் அமைத்துள்ளது. அஜித்தின் நடிப்பை பாராட்டும் பலர் அவருக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என சமூகவலைதளங்களில் கூறியுள்ளனர்.