நெல்லைக்கு அருகில்,வயதான தம்பதியர்களை, இரண்டு திருடர்கள் கையில் கூரிய ஆயுதங்களுடன், தாக்க முற்பட்ட வேளையில்,அந்தத் தம்பதியர் இருவரும் சேர்ந்து, செருப்பு, நாற்காலி என இன்னும் கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொண்டு,அந்தத் திருடர்கள் மீது, ஒன்றன் பின் ஒன்றாக வீசி எறிந்து விரட்டி அடித்தனர். இதனால், நிலைகுலைந்த திருடர்கள், ஒரு கட்டத்தில்,அந்த பெண்மணியின் கழுத்தில் உள்ள சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். உண்மையில், இந்த வயதில் இவ்வாறு துணிச்சலாக செயல்பட்டது அதிசயம் தான்.
இப்போது இந்த முதிய தம்பதிகளின் வீரமான செயல், CCTV காட்சி மூலம் ,சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவப்பட்டு பல பிரபலங்கள் வாழ்த்துமளவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ,இந்த வீடியோவைப் பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்தத் தம்பதிக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.இப்போது அந்த வாழ்த்தும் பரவலாகப் பேசப்படுகிறது.