அமெரிக்காவைச் சேர்ந்த,டெய்லர் இவனோப் என்பவர்,விறகு சேகரிக்க அங்குள்ள கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது போத்தல் ஒன்று, அதற்குள் ஒரு துண்டு காகிதத்தோடு இருந்துள்ளது.
அதில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று இருந்துள்ளது.இவருக்கு ரஷ்ய மொழி தெரியாததால் இதைத் தெரிந்தவர்கள் மொழி பெயருங்கள் என facebook இல் பதிவுசெய்துள்ளார்.
அதில் ஒருவர், கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை மொழிபெயர்த்துக் குறிப்பிட்டார்.அதாவது “ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து தான் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதைக் கண்டுபிடிப்பவர்கள் உடனடியாக “43, வி.ஆர்.எக்ஸ்.எப். சுலாக் விலாதிவோஸ்தோக்” என்ற முகவரிக்கு தயவுசெய்து பதில் எழுதவும். நீங்கள் எல்லோரும் ஆரோக்கியமாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் எழுதப்பட்டிருந்தது. மேலும் அதை எழுதியவர் கேப்டன் அனடோலி போட்சனேகோ என்பதும், வருடம் ஜூன் 20, 1969 என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
இதையடுத்து ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று கேப்டன் அனடோலி போட்சனேகோவை எப்படியோ கண்டுபிடித்து,இது தொடர்பாகக் கேட்டபோது,அவர் “என்னுடைய 35 வயதில் இதை உண்மையில் ஒரு விளையாட்டாகத் தான் செய்தேன். இந்த கடிதம் எதுவரை போகும் என்று பார்க்கலாம் என்ற ஒரு எண்ணத்தில் ஆசையில் ஆவலில் அனுப்பினேன்” என புன்னகைத்த வண்ணம் கூறியுள்ளார்.