ஒரு காலத்தில் விரல் விட்டு என்னும் போது சிறந்த நடிகர்கள் ஓரிரு நடிகர்கள் மட்டும் தான், அதிலும் கார்த்திக் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் காதல் படம் மட்டுமல்லாது நகைச்சுவையிலும் தன்னை யாரும் மிஞ்சாத அளவுக்கு இடம் பிடித்த நடிகர்.
சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருந்த அவர் அண்மையில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.மாஞ்சா வேலு, ராவணன்,அநேகன் போன்ற படங்களில் நடித்த நவரச நாயகன் இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். புதிய டைரக்டர்களுடைய படங்களில் நடிக்க மாட்டேன் என்று, இவர் சொன்னதாக அண்மையில் வதந்தி கிளம்பியிருந்தது, இதை நம்ப வேண்டாம் என்று கூறிய கார்த்திக் இப்போது கதை சொல்ல வேண்டும் என்று சொல்கின்ற டைரக்டர்களை அலைய விடாமல் கதை கேட்டு வருகிறார்.
ஆனால் அப்படி கதை சொல்ல வருபவர்கள் இப்படி, அப்படி நடிக்க வேண்டும் என்று கட்டளை போடுவோருக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.எனக்கென ஒரு பாணி இருக்கிறது
அதை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் எப்போதும் எனது பாணியிலேயே நடிப்பேன் என்னுடைய ஒரிஜினலை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டேன். மணிரத்னம் கூட எனக்காக அவருடைய கதையை கூட மாற்றிக்கொடுப்பார் அதனால் எப்போதும் நான் நானாகவே இருப்பேன்.