ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டில், அதுவும் வீட்டின் உள் கூரைக்கு மேல், அங்குள்ளவர்களுக்கே தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக தேனீக்கள் கூடு கட்ட ஆரம்பித்து, மிகப் பெரும் தேனீக்கள் கூட்டமே அங்கு குடிகொண்டுள்ளதாம்.
இவ்வாறு மிகப் பெருமளவிலான தேனீக்கள் கூடு கட்ட பல மாதங்கள் தேவைப்படும்.
அந்தவகையில்,சுமார் பத்து மாதங்களாக இவ்வாறு தம் கூட்டை இந்தத் தேனீக்கள் கட்டிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேனீக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.வீட்டில் உள்ளவர்கள் மிகப்பெரும் கலக்கத்தில் இருந்துள்ளனர்.
இனப்பெருக்கத்தில் ஈடுபட சரியான மரங்கள் கிடைக்கவில்லை எனில், இவ்வாறு வீட்டின் சுவர்கள், கூரைகள் போன்ற இடங்களில், தேனீக்கள் கூடு கட்டும்.அவ்வாறே இங்கும் நடந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 50 கிலோ தேன் அந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாம்.அதேநேரம் பாதுகாப்பான முறையில் தேனீக்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.