கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு, போதைப்பொருட்கள் தடுப்பு போலீஸ் படை ,அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வரும்போது வேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்தக் காரில் 2 சவப்பெட்டிகள் இருந்துள்ளன.அடக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளனர் காரில் இருந்த சிலர்.இருப்பினும் கொஞ்சமும் தயங்காமல், போலீசார் அந்த சவப்பெட்டிகளை திறந்து பார்த்தால், அங்கே இறந்தவர்களின் உடல்கள் இல்லை. மாறாக 300 கிலோ கஞ்சா பொதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்த போலீசார்,வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.