புதுடெல்லி மெட்ரோ ஸ்டேஷன் முன் இருக்கும் லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டு கால்களும் முறிவு ஏற்பட்ட நிலையில் 11 மாத குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.மருத்துவர்கள் அந்த குழந்தையின் இரண்டு கால்களையும் அசைக்காமல் படுத்தவாறு செங்குத்தாக கட்டி வைக்க வேண்டும் என்று தாயிடம் கூறியுள்ளார்கள்.குழந்தை ஏற்கனவே அதிக வலி காரணமாக அழுது கொண்டே இருந்துள்ளது .மருத்துவர்கள் குழந்தை இப்படியே இருந்தால் சிகிச்சை அளிப்பது சிரமம் என்று தாயிட தெரிவித்ததும் ,தாய் உடனடியாக சமயோசிதமாக செய்யப்பட்டு ,குழந்தைக்கு மிகவும் பிடித்த பொம்மையினை குழந்தைக்கு அருகில் படுக்க வைத்து அதன் கால்களை செங்குத்தாக கட்டுமாறு வைத்தியர்களிடம் சொல்ல ,அந்த பொம்மையை பார்த்த அந்த குழந்தை தான் கால்களை செங்குத்தாக கட்டும் போது பேசாமல் இருந்ததோடு மட்டும் அல்லாமல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கியது ,இந்த செயலை பார்த்த வைத்தியர்கள் அந்த தாயை பாராடினார்கள் .
இப்போது சமூக வலைத்தளங்களில் இந்த படங்கள் காணொளிகள் மிக வேகமாக பரவி வருகின்ற அதே நேரம் உலகம் முழுவது இருந்து அந்த தாய்க்கு பாராட்டு குவிந்து வருகிறது