புளோரிடா மாகாணத்தில் உள்ள சேப்டி ஹார்பர் பகுதியில், தனித்து கட்டப்பட்ட வீடொன்றுக்குள் திருடன் ஒருவன் திருடச் சென்றுள்ளான்.
அந்த வீட்டிற்குள் நுழைந்த திருடன், வந்த வேலையை பார்க்காமல் நேராக சமையல் அறைக்குள் சென்று சமைக்க தொடங்கியிருக்கின்றார்.
குறித்த வீட்டில் வாழ்ந்து வருபவர் தூங்கி கொண்டிருந்த நிலையிலேயே, இந்த சமையல் நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
தூக்கத்தில் இருந்தவர், வீட்டின் சமையல் அறையில் ஏதோ சத்தம் வருவதை கேட்டவர், சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு வேறு ஒருவர் சமைத்துக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் வசிப்பவரை கண்ட திருடன், அவரிடம் ''நீங்கள் போய் தூங்குங்கள்'' என கூலாக சொல்லியுள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனே காவல்துறைக்கு போன் செய்வதாக மிரட்டியதை அடுத்து, திருடன் வீட்டை விட்டு வெளியே ஓடி அருகில் இருந்த காட்டில் மறைந்து இருந்துள்ளான். தகவல் கிடைத்த காவல்துறையினர் காட்டில் இருந்த திருடனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடக்கும் போது திருடன் மது போதையில் இருந்ததாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.