லங்காபாய் காரத் முதன் முதலில் கர்ப்பமாகி வைத்தியசாலைக்கு வந்த போது முதலாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.அதன் பின்னர் பலமுறை கர்ப்பமாகியும் வைத்தியசாலைக்கு ஒருமுறைகூட வரவில்லை.
அவர் அடுத்தடுத்து 15 பிரசவங்களையும் வீட்டிலேயே பார்த்து முடித்துவிட்டார்.
இதனால் அவரது பிரசவ கதைப்பற்றி வெளியுலகிற்கே தெரியவர வாய்ப்பில்லாமல் போனது.
இந்தநிலையில் 17 வது குழந்தையை பெற்றெடுக்கத் தயாரான பெண் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு வந்ததாக மாநகராச்சி வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
38 வயதான அந்தப்பெண்ணிற்கு தற்போது 11 குழந்தைகள் உள்ளனர். மற்ற 5 குழந்தைகள் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அவர் இதுவரை 20 தடவைகள் கர்ப்பமடைந்தும் அதில் 3 தடவைகள் கருச்சிதைவு ஏற்ற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
17 வது பிரசவத்திற்காக காத்திருக்கும் அந்தப் பெண்ணிற்கு இந்தத் தடவை பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்து உள்ளனர்.