Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
2 KG பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 1 KG அரிசி - இது எங்கே தெரியுமா?

sooriyan gossip - 2 KG பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 1 KG அரிசி - இது எங்கே தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,701 Views
பிலிப்பைன்ஸ் நாட்டில் குப்பை பிரச்சினைக்கு, அரசாங்கம் எடுத்த நடவடிக்கைதான் இப்போது வைரல்  விடயம். 

அங்கு குப்பை பிரச்சினை ஒரு பெரிய விடயமாகவே பேசப்பட்டு வருகின்றது. கடந்த 2015ம் ஆண்டு, கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகள் வரிசையில் பிலிப்பைன்சும் முன்னணி வகிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சி மட்டுமல்லாது அதனை மறு சுழற்சி செய்யும் பணியிலும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், தலைநகர் மணிலா அருகிலிலுள்ள பேயனார்க் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு, அரசாங்கம் சூப்பர் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு கிலோ அரிசியை சுமார் 50 ரூபாய் கொடுத்து வாங்க சிரமப்படும் இந்த மக்கள், (இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 125 ரூபா ) நன்மையை பெற்றுக்கொள்ளும் வகையில் Plastic காழிவுகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அரசாங்கத்திடம் வழங்கினால், 1 KG அரிசி வழங்கப்படுகிறது.
 
இந்த திட்டம் அறிமுகம் ஆன நாளில் இருந்து, அந்த பகுதி மக்கள் Plastic கழிவுகளை ஆர்வத்தோடு சேர்த்து வருகின்றார்கள். மக்களிடம் இருந்து கிடைக்கும் இந்த குப்பைகளை பெற்றுக்கொள்ளும் அரசாங்கம் மறு சுழற்சியும் செய்து கொள்கின்றமை சிறப்பாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top