இந்தியாவில் பல விசித்திர நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இந்தியா மத்தியப் பிரதேசத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
போபாலில் உள்ள இந்திராபுரி மக்கள் இந்த ஆண்டு மழைபெய்ய வேண்டி கடந்த ஜூலையில் இதற்காக இரண்டு ஆண், பெண் தவளை பொம்மைகள் செய்யப்பட்டு ஊர்மக்கள் இணைந்து மிக விமரிசையாக திருமணம் செய்துவைத்தனர். கனமழையும் பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கொடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
இதுவரை மத்தியப்பிரதேசம் ஆண்டு சராசரி மழை அளவை விட 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது . போபாலில் 81 சதவீதம் கூடுதல் மழை பொழிந்துள்ளது.எனவே, மழை பொழிவை நிறுத்துவதற்காக, திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகளை பிரித்து வைப்பதற்கு ஊர்மக்கள் முடிவுசெய்து இதற்கான பிரிவு விழா துரந் மகாதேவ் கோயிலில் நடத்தப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த தவளை மொம்மைகள் வெளியே எடுத்து பிரிக்கப்பட்டன. தவளைகளுக்கு செய்யப்பட்ட இந்த விவாகரத்தின் மூலம், மழை நின்று விடும் என கருதுகின்றனர்.