கை, கால் ஊனமடைந்தவர்களுக்கு அல்லது இல்லாதவர்களுக்கு அவற்றை செயற்கையாக பொருத்தும் மருத்துவம், தற்போது மலிந்து விட்டது என்றே சொல்லலாம்.
நம்மிடம் பணம் இருந்தால் இவற்றை இலகுவாக செய்ய முடியும். இது இப்படி இருக்க, தாய்லாந்தில் செயற்கை பாதம், யானை குட்டி ஒன்றிக்கு பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த யானைக்குட்டி பிற யானைகளுடன் வசிப்பதற்காக லம்பங் யானை பாதுகாப்பு மையத்திற்கு தற்போது இடம்மாற்றம் செய்ய காத்திருக்கின்றது.
கடந்த 2016 ஆண்டு, பொறியில் சிக்கியிருந்த இந்த யானைக்குட்டி, பாதம் சேதமைந்திருந்த நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக வன ஆர்வலர்கள் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.