''நான் மனதளவில், 74 வயது இளைஞனாக உள்ளேன்' - இதுதான் அவர் செய்திருக்கும் ட்வீட். ஊழல் வழக்கில், கைதாகி டில்லியில் உள்ள திஹார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிதம்பரம் சார்பில் வெளியிடப்பட்ட ட்வீட் ல் ' ''சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 'நான் மனதளவில், 74 வயது இளைஞனாக உள்ளேன்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' நிறுவனம் அன்னிய முதலீடுபெறுவதற்கு அனுமதி அளித்ததில், ஊழல் செய்ததாக, கொங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான, சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவருடைய, 74வது பிறந்தநாளையொட்டி, பலரும் சமூக வலை தளங்களில், நேற்று முன்தினம் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். சிதம்பரம் சார்பில், அவருடைய குடும்பத்தார், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''எனக்கு, 74 வயதாகி விட்டது என, அனைவரும் நினைவுபடுத்தியுள்ளனர்.
நான் மனதளவில், 74 வயது இளைஞனாகவே உள்ளேன். உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் கவலை அளிப்பதாக உள்ளது. ஓகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வளர்ச்சி, 6.05 சதவீதமாக உள்ளது. ஆண்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சி, 20 சதவீதத்தை எட்டாத நாடு, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 8 சதவீதம் அளவுக்கு எட்ட முடியாது. கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.