ஜமால் கசோக்கி, சவூதி அரசு குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர். இந்த நிலையில் சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் 2 ம் திகதி அன்று, அவர் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இவரது மர்ம கொலை உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எவ்வாறன போதும் ஜமால் கசோக்கியின் மரணத்தில் பெரும் மர்மம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க பொது ஒலிபரப்புத் துறை சார்பில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனது மேற்பார்வையில் நடந்ததால் கசோக்கி மரணத்துக்கு தானே பொறுப்பு எனக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
]
முதலில் கசோக்கி கொலையை மறுத்து வந்த சவூதி, பின்னர் தங்கள் நாட்டின் தூதரகத்தில் தான் கொலை நடந்தததாக ஒப்புக் கொண்டது. ஆனால், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டார் என்பதை மறுத்து வந்தது. இந்நிலையில் முதன்முறையாக பேட்டி ஒன்றில் தானே பொறுப்பு என்று முகமது பின் சல்மான் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.