ஆப்கானிஸ்தானில் பல காலமாக தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரத்தை கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். 2001 ம் ஆண்டு ஆப்கானில் நுழைந்த அமெரிக்க படைகள், அப்போது நடந்த போரில் தலிபான்களை வீழ்த்தி, ஜனநாயக ஆட்சியை கொண்டு வந்தனர். போரில் தோல்வி அடைந்ததற்கு பழிவாங்கும் விதமாக, அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர். 2014 ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது என தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.மிரட்டலையும் மீறி வாக்களித்த 6 பேரின் விரல்களை வெட்டினர்.
இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நேற்று அதிபர் தேர்தல் நடந்தபோது தலிபான்கள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். அதையும் மீறி தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலின்போது விரலை இழந்த சபியுல்லா சபி வாக்களித்துள்ளார்.