Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
கணவன் மனைவிக்குள் சண்டையா?இது உங்களுக்காக...

SooriyanFM Gossip - கணவன் மனைவிக்குள் சண்டையா?இது உங்களுக்காக...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

593 Views
புரிந்துணர்வு,விட்டுக்கொடுப்பு என்ற இரண்டும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் சிறந்த தீர்வாகவும் மருந்தாகவும் அமைகின்றது.இவை கணவன் மனைவிக்குள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலே போதும்.சண்டை என்ற வார்த்தைக்கே அந்த குடும்பத்தில் இடமிருக்காது..
மொத்தத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒரே தேவைகள், ஒரே விருப்பங்கள், ஒரே மாதிரியான நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள்,தெரிவுகள் என்பது ஒரே மாதிரியாக இருக்காது.இந்த அனைத்தையும் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு அல்லது தெரிந்து கொண்டு வாழ்வதற்கு கொஞ்ச காலம் எடுக்கும்.

எனினும் இருவரும் இருவருக்குள்ளும் எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.இருவரும் விட்டுக்கொடுங்கள்.ஒருவரை ஒருவர் எல்லா விடயங்களிலும் புரிந்து கொண்டு நடக்க பழகிடுங்கள்.எந்த ஒரு விடயம் செய்வதாயினும் இருவரும் கலந்துரையாடி தீர்வு காணுங்கள்.அவ்வாறாக நீங்கள் செய்யும்போது உங்கள் இருவருக்குள்ளும் அன்பும் பாசமும் காதலும் புரிந்துணர்வும் கொஞ்சம் அளவுக்கதிகமாக அதிகரிக்கும்.

 ஏதாவது சண்டையின் போது மனைவியின் குடும்பத்தை கணவனோ,கணவனின் குடும்பத்தை மனைவியோ சுட்டிக்காட்டி பேசுவதை திட்டுவதை நிறுத்துங்கள்.நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது.இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு நீங்களேதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முக்கியமாக கணவன் மனைவிக்காகவும்,மனைவி கணவனுக்காகவும் முடிந்தவரை நேரத்தை ஒதுக்குங்கள்.இருவரும் சேர்ந்து வெளியில் செல்லுங்கள்.மனைவி ஆசைப்பட்ட இடங்களுக்கு கூட்டிச்செல்லுங்கள்.
விருப்பப்பட்டதை வாங்கிக்கொடுங்கள்.அவ்வாறாக கணவனான நீங்கள் மனைவியுடன் அணுகும்போது மனைவி உங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக காதலிக்க ஆரம்பித்து விடுவார்..

மனைவி கணவனிடமோ ,கணவன் மனைவியிடமோ சொல்லும் விடயங்களை கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள்.சொல்லும் விடயங்களை நம்புங்கள்.அதற்கான தீர்வினை கொஞ்சம் பக்குவமாக கையாளுங்கள்.

இவ்வாறான செயல்கள் இருவர் மீதும் மாறி மாறி அளவுகடந்த நம்பிக்கையை அதிகரிக்கும்.நம்பிக்கை என்பது கண்ணாடி போல்! அதனால் உங்கள் மீது உங்கள் கணவனோ மனைவியோ கொண்ட நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள்.உண்மையாக இருங்கள்.அதன்பின் உங்கள் வாழ்வு முழுதும் குடும்பத்தில் பிரிவும் சண்டையும் இருக்காது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top