இந்த நிலையில் சவுதி பெண்களை ஆயுதப்படையில் சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.
உடல் மற்றும் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியும் சட்டம் தற்போதும் அமுலில் உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் தற்போதைய இளவரசர் முகமது பின் சல்மான், இந்த விஷயங்களில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அவற்றில், கார் ஓட்டுதல், விளையாட்டு போட்டிகள், சினிமா ஆகியவற்றை நேரடியாகப் பார்க்க அனுமதி என, பெண்களிடம் தாராளம் காட்டுகிறார்.
இதன் அடுத்த நகர்வாக சவுதி அரேபிய ஆயுதப்படையில், பெண்கள் சேருவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.