உலகிலே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினை சீனாவும், நேபாளமும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.
உத்தியோகபூர்வ பயணமாக நேபாளம் சென்ற சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்புக்கு பின்னர், இருநாட்டு தலைவர்களும் இதனை இணைந்து அறிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர், சீனாவுக்கு எதிராக தங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.