ஜப்பானின், ஹின்சு தீவு பகுதியை, ஹகிபிஸ் எனப்படும் சூறாவளிக்காற்று தனது கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியதில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிக்கு, 216 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால், ஹின்சு தீவு மட்டுமின்றி, ஜப்பானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளும் கடும் பாதிப்பை சந்திந்துள்ளன.
சூறாவளியின்போது பெய்த பலத்த மழையால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, முக்கிய நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோர சூறாவளி காரணமாக 15 பேரை காணவில்லை என, தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன், ஜப்பானில், 20க்கும் அதிகமான ஆறுகளில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மீட்பு பணிகளை மேற்கொள்வது, மிகவும் சவாலானதாக உள்ளது என, மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.