இந்தநிலையில், ஒக்டோபர் 16ம் திகதியான இன்றைய தினத்தை "உலக உணவு நாள்" என ஐக்கிய நாடுகள் சபை 1979ம் ஆண்டு அறிவித்ததிலிருந்து இன்றுவரை ஆண்டுதோறும் இந்த சிறப்பு நாள் கொண்டாடப்படுகின்றது. 150ற்கும் அதிகமான நாடுகளால் இந்த 'உலக உணவு நாள்' கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பதிவுகள் சொல்கின்றன.
1945ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இதே திகதியில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூரும் முகமாக, ஐக்கிய நாடுகள் சபை ஒக்டோபர் 16ம் திகதியை சிறப்பு நாளாக அறிவித்தது. இந்த அறிவிப்பானது 1979ம் ஆண்டு கார்த்திகை மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 20வது பொது மாநாட்டில் வைத்து முதன்முறையாக வெளியிடப்பட்டது.
இந்த 'உலக உணவு நாள்' உலகின் பெருமளவான நாடுகளில் கொண்டாடப்படுவதற்கு பிரதானமான காரணமாக அமைந்தவர், 1979ம் ஆண்டு காலப்பகுதியில் ஹங்கேரி நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போல் ரொமானி. இவரது முயற்சியின் காரணமாகவே 'உலக உணவு நாள்' கொண்டாடப்படும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் அனைவராலும் ஏகமனதாக ஏற்கப்பட்டு இந்த ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.