குழந்தை அழுவதும், அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டுப் பாடி ஆடும் காட்சிகள் சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.
லெபனானில், சில புதிய வரிகள் உட்பட, பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லெபனான் முழுவதும், சுமார் ஒரு வாரமாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு பெய்ருட் அருகே உள்ள, பாப்டா மாவட்டத்தில், சாலையில் மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, எலன் ஜபோர் என்ற பெண், தன் ஒன்றரை வயது குழந்தையுடன், அவ்வழியே காரில் இருத்திவிட்டு போயிருக்கின்றார். காரில் துாங்கிக் கொண்டு இருந்த குழந்தை போராட்டக்காரர்களின் உரத்த கோஷங்களை கேட்டு, விழித்து, பயந்து, அழத் தொடங்கியுள்ளது.
இதை அவதானித்த குழந்தையில் தாயார், சற்று மெதுவாக கோஷங்கள் எழுப்புமாறு, போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மனம் மாறினர். குழந்தைகளுக்கான, 'ரைம்ஸ்' பாடலை பாடி, நடனமாடி, அந்த குழந்தையை மகிழ்வித்தனர்.