லாகூர், மருத்துவமனையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நவாஸ் செரீப்பை பார்க்கச் சென்ற அவரது மகளுக்கு உடல் நிலை சரியில்லாததை அடுத்து, அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஏழாண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து லாகூர் சிறையில் நவாஸ் செரீப் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்ற காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நேற்று முன்தினம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் இம்ரான் உத்தரவுப்படி நவாசை சந்திக்க மரியத்திற்கு பஞ்சாப் மாகாண அரசாங்கம் அனுமதி கிடைத்தது. மருத்துவமனைக்கு சென்று நவாசை அவரது மகளான மரியம் சந்தித்தார்.
சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்கு பின், மர்யத்தின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதே மருத்துவமனையில் மரியம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.