அமெரிக்க அதிபரின் அதிரடி நடவடிக்கைகள் சில நேரங்களில் நாட்டு மக்களையே திக்குமுக்காட செய்துவிடும் . பொதுவாக உள்நாட்டவர்களை விட வெளிநாடுகளுக்கே அதிர்ச்சிவைத்தியம் அடிக்கடி நடக்கும் ட்ரம்ப் ஆட்சியில். ஆனால் இந்தமுறை அமெரிக்க பத்திரிகைகள் பக்கம் திரும்பியிருக்கிறார் ட்ரம்ப்.
ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும், பத்திரிக்கை சுதந்திரம் பாதுக்காக்க படவேண்டும் என பக்கம் பக்கமாக பேசும் அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிராக செய்திகள் வரும்போது பத்திரிக்கை, ஊடக சுதந்திரங்களை கட்டுப்படுத்தவே முயட்சிப்பார்கள். இப்போது அமெரிக்க அதிபரும் இதே வேலையைத்தான் பார்த்திருக்கிறார் .
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ்கள் வொஷிங்டன் போஸ்ட், நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதனால், இந்த பத்திகை நிறுவனங்களின் மீது கடும் கோபம் கொண்டுள்ளார் ட்ரம்ப்.
இந்நிலையில், இந்த பத்திரிகைகளை வாங்கக் கூடாது என வெள்ளை மாளிகைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் கடந்த திங்களன்று ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அவர், ‘நியூயோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் போலி செய்தித்தாள்கள். இவற்றை இனி வெள்ளை மாளிகையில், அரசு அலுவலகங்களில் வாங்கக் கூடாது.,’ என்று கூறியுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமுல் படுத்தப்பட்டுள்ளது