கியூபா தலைநகர் ஹவானா. ஹவானா நகர் கடந்த 1519ஆம் ஆண்டு நொவம்பர் 15-ம் திகதி உருவாக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில், கட்டிடங்கள் மற்றும் அவற்றின் கலைநுட்பங்கள் காரணமாக, உலகின் எழில்மிகு நகரங்களில் ஒன்றாக ஹவானா பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹவானாவின் 500-வது ஆண்டு விழா, மிகவும் அழகு பொருந்திய வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஹவானாவின் மோரோ கோட்டையின் மீது நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கண்களை கவரும் வாண வேடிக்கை, லேசர் திருவிழா மற்றும் பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த ஆனந்த கொண்டாட்டத்தில் கியூபா அதிபர் DIAZ-CANEL, பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலாண்டே உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.