ஒல்லி பெல்லி என்றுஅழைக்கப்படும் நடிகை இலியானா கடந்த பல வருடங்களாக காதலித்து வந்து சமீபத்தில் பிரிந்தார். தற்போது இந்தியா திரும்பியுள்ள அவரை அடிக்கடி பொது இடங்களில் பார்க்க முடிகிறது.
காதல் பிரிவு பற்றி தற்போது ஒரு பேட்டியில் மிக கலக்கத்துடன் பேசியுள்ளார் அவர். 'தேவை இல்லை என முடிவான பிறகு அதை பேசி கிளறுவதில் அர்த்தம் இல்லை. அது ஒரு நல்ல அனுபவம். என்னை நானே தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என உணர்ந்தேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் சென்ற வருடம் முழுவதும் தான் உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஒரு நாளுக்கு 12 மாத்திரைகள் கூட சாப்பிட்டுவந்தாராம் அவர். அதனால் தான் தற்போது தோற்றமும் இப்படி மாறிவிட்டது என்று கூறியுள்ளார் அவர். எல்லா வாரமும் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பதால் தான் சினிமாவில் நடிப்பதையே நிறுத்தியிருந்தேன் என தெரிவித்துள்ளார் இலியானா.
மேலும் உடல் எடை அதிகம் கூடியதால் ஜிம்மிற்கு செல்லவேண்டும் என்று விரும்புவேன், ஆனால் ஜிம்மில் இருந்து வெளியில் வரும் போது புகைப்படம் எடுத்து போட்டுவிடுவார்கள். அதனாலேயே ஜிம் செல்வதை பலமுறை தவிர்த்தேன் என்றும் கூறினார் அவர்.