மலேசியாவிலுள்ள போர்னியோ தீவில் வசித்து வந்த 25 வயதான சுமத்ரான் வகை பெண் காண்டாமிருகம் ஒன்று கடந்த சனிக்கிழமை இறந்துள்ளது.
இதன் மூலம் இந்த வகையைச் சேர்ந்த காண்டாமிருகம் முற்றிலும் தமது நாட்டில் அழிந்துவிட்ட்தாக மலேசிய அதிகாரிகள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் கடந்த மே மாதம் உயிரிழந்தது.
ஆசிய கண்டம் முழுவதும் பரந்து காணப்பட்ட சுமத்ரான் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து தற்போது வெறும் 100 மட்டுமே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக கருதப்படுகிறது.
இமான் என்ற பெயரைக் கொண்ட அந்த பெண் காண்டாமிருகம் சனிக்கிழமை மாலை 05:35 மணியளவில் உயிழந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"கடந்த 2014ஆம் ஆண்டு எங்களது வசம் வந்ததில் இருந்து உயிரிழந்தது வரை நாங்கள் இமானை மிகச் சிறந்த முறையில் பராமரித்து வந்தோம்" என்று மலேசியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.