ஈராக் நாட்டின் பிரதமராக செயற்பட்டவர் அப்துல் மகதி. இவர் தற்போது தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இடைக்கால பிரதமராக அப்துல் மகதி நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் அதிபர் பெர்காம் சலீக் புதிய பிரதமரை நாடாளுமன்ற அனுமதியுடன் அறிவிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.