நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கொண்டது.
இந்தப் படத்தை அடுத்து இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் "ஹீரோ" படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தைத் தயாரித்த கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.
இந்தப் படத்துக்கு "டொக்டர்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துக் கொண்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரெமோ திரைப்படத்தில் இணைத்த இருவரும் இரண்டாவது தடவையாக இப்படத்தில் மீண்டும் இணையவுள்ளனர்.