இந்தியாவின், தெலுங்கானா மாநிலத்தின், பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் எரித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, நான்கு பேரும், என்கவுண்டரில் ,சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரையும், கொலை செய்த விதத்தினை செய்துகாட்டுமாறு கூறிய போது, குற்றவாளிகள் தப்ப முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த அப்பாவிப் பெண்,பரிதாபமாக ,எந்த இடத்தில் எரியூட்டப்பட்டு துடிதுடிக்க இறந்தாரோ, அதே இடத்தில், இந்தப் பாவிகளின் உயிரும் பறிபோனது.