பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் கன்னு பிரடிட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிப்பது கூண்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார் .
சிங்கத்தின் கூண்டுக்கு அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது கூண்டில் இருந்த வெள்ளைச் சிங்கம் ஒன்று திடீரென பாய்ந்து பிரடிட்டாவின் இடது கையைப் பிடித்து கடித்துக் குதறியது. இதில் கத்திய அவர் சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.
சிங்கம் கடித்ததில் பிரடிட்டாவிற்கு இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.