இன்றைய காலத்தில் பிளாஸ்டிக்கின் பாவனை சுற்றுச் சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்களும் இந்த பிளாஸ்டிக்கால் பாதிக்கப் படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் குப்பைகளால் நண்டு இனங்களில் ஒன்றான 'துறவி நண்டு' அழிவைச் சந்தித்து உள்ளன என பிரிட்டனின் தேசிய வரலாற்று மியூசியம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டினைச்சுமந்து கொண்டு இவை தனியாக வாழ்வதால் துறவி நண்டு என அழைக்கப்படுகிறது. கடற்கரையில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால், துறவி நண்டுகள் பாதிக்கப்படுகின்றன. 5 லட்சத்து 70 ஆயிரம் துறவி நண்டுகள் இறந்து விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.