அறிவியலில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இலங்கையில் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில், கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவன், மாற்றுத்திறனாளிகளுக்கான சூரிய சக்தி (Solar power) சைக்கிளினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 8 ல் கல்வி பயின்று வரும் நிலையில், கழிவுப்பொருட்களைக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்காக தனது தாத்தாவின் உதவியுடனும் தனது விடா முயற்சியின் மூலமும் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.