இந்த கசப்பான உண்மையை தனது அதீத ஆடம்பர வாழ்க்கை மூலம் அனுபவித்து உணர்ந்திருக்கின்றார் திரைத்துறையை சேர்ந்த நடிகை ஒருவர். எப்போதும் நாம் செய்யும் தவறுகளையும் பிழைகளையும் வெளியில் கூறுவதில்லை. காரணம், மற்றவர்கள் எம்மைப்பற்றி மற்றவர்கள் தவறாக நினைப்பார்களே என்ற எண்ணப்பாடு எனக்குள் தோன்றுவதே. ஆனால், தனது அதீத ஆடம்பரத்தை காரணமாக தான் சேர்த்து வைத்த செல்வத்தைத் தொலைத்ததை பொதுவெளியில் கூறி மற்றவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளாதிருக்க முன்மாதிரியாகியிருக்கின்றார் இந்த நடிகை.
தற்போதும் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கின்ற ஜொஹானஸ்பேர்க்கை சேர்ந்த மின்னி ஜோன்ஸ் என்ற நடிகையே, தனது அதீத ஆடம்பர வாழ்க்கையின் மூலம் சொத்துக்களை இழந்ததுடன் அது குறித்து பொதுவெளியில் கருத்துக் கூறுகையில், "எனது 20வது வயதில் 'லிஜிட்' என்ற அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதன் மூலம் கோடிக்கணக்கான தொகையை வெற்றிப் பரிசாக அள்ளிக்கொண்டேன்.
இருந்தும், கைகளில் கொட்டிக்கிடந்த அந்த பணத்தொகையை சரியாக கையாளத் தெரியாமல் வீண் ஆடம்பரச் செலவுகளால் முழு பணத்தையும் தொலைத்தேன். வெறும் ஒரே வருடத்தில், அதாவது எனது 21வது வயதில் எல்லாமே தொலைத்து போனது. ஆனாலும், வாழ்க்கையில் நல்லதொரு படிப்பினையை இதன் மூலம் கற்றுக்கொண்டேன். பின்னர், உடல் அழகுபடுத்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழிலை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்ததோடு, நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தினேன். தற்போது, இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டுவருவதனால் வாழ்க்கை அழகாக நகர்கின்றது" என்கின்றார் இந்த கறுப்பழகி.