சல்மான் கான், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று கோவாவுக்கு விமானத்தில் சென்ற சல்மான் கான் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் ‘செல்பி‘ எடுக்க முயன்றுள்ளார்.
செல்ஃபி எடுக்க உடன்படாத அவர் குறித்த ரசிகரின் செல்போனை பறித்துள்ளார்.
இந்த சம்பவம் காணொளியாக பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது.