கொரோனா வைரஸ் நோய் தொற்றின் எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை சீனா 8 நாள்களில் கட்டிமுடித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விதமாக வூஹானின் ஹௌசின்ஷான் பகுதியில் சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று சீன அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜனவரி 23ஆம் திகதி தொடங்கிய இந்த சிறப்பு மருத்துவமனைகளின் கட்டமைப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. கொரோனா சிறப்பு மருத்துவமனை வெறும் 8 நாள்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று திங்கள்கிழமை முதல் இங்கு மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1,400 மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.