உலகின் மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கு ஜெய்ன்டியா மலைப்பகுதியில் ஸ்கொட்லாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கிருந்த குகையில் அவர்கள் ஆராய்ச்சி செய்த போது, புதியவகை மீன்களைக் கண்டுள்ளனர்.
இவை இமாலய ஆறுகளில் உள்ள கோல்டன் மஷீர் வகை மீன்களுடனான பண்புகளை ஒத்திருந்தன. இருப்பினும் இவை தனி இனமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி மீன் தினங்களிலேயே இவைதான் மிகவும் பெரியவை என ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இவை சராசரி அளவு எட்டரை சென்ரி மீட்டர் வரை இருந்துள்ளன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மேகாலயா மீன்கள் 30 சென்ரி மீட்டர் வரை இருப்பதால் உலகிலேயே மிகவும் பெரிய நிலத்தடி மீன்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.