இலங்கையில் இளம் கலைஞர்களின் புதுப்புது படைப்புக்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றது. அப்படி உருவான இன்னுமொரு படைப்புதான் யாழ் யசிதரனின் செம்மலி... பாடல்
காதலர் தினத்திற்காக இந்த பாடல் அர்ஜுன் ,கீர்த்தி,ஆனந்தனின் இயல்பான நடிப்பில்,மிகவும் நேர்த்தியான ,அழகான, இயற்கை காட்சிகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
கேட்கும் போது மனதை மயக்கும் ரசிக்க வைக்கும் நேர்த்தியான இசையினை வழங்கி பாடி இருக்கின்றார் ஜெயந்தன் விக்கி.
பாடலுக்கான அற்புதமான வரிகளை தந்திருக்கின்றார் அந்தோனிப்பிள்ளை நிஷாந்தன்,இந்த பாடல் காட்சியில் வரும் நடிகரை வரைந்து இந்த பாடலுக்கு மென்மேலும் அழகு சேர்த்துள்ளார் யசிதரன் ஷால்வன்,நல்லா கர்ணா பாடலை தயாரித்து தந்துள்ளார்.
இந்த பாடலானது யாழ் யசிதரனின் எண்ணத்தில் ,இயக்கத்தில்,அவரின் நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.