அண்மையில் யாழில் மாணவி ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை , கிளிநொச்சியில் சிறுமி மீதான துஷ்பிரயோகம் போன்றன இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
பாடசாலை மற்றும் வேலைக்காக வெளியே செல்லும் பெண்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பும் வரை தினசரி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.
குறிப்பாக பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்கள், காமுகர்களினால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் சம்பவமொன்று மஹரகமையில் சேவையில் ஈடுபடும் 138 ஆம் இலக்க பஸ்ஸில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் இருந்த பெண்ணொருவரின் அருகில் அமர்ந்த நபரொருவர் மிகவும் சூட்சமமான முறையில் அவரைத் தொட்டுள்ளார்.
நாகரீகமான உடை, கழுத்துப்பட்டி , காதில் 'ப்ளூடூத் ஹெட்செட்' என கௌரவமாக காட்சியளிக்கும் அவர் பஸ்ஸில் ஏறி பல ஆசனங்கள் வெறுமையாக இருந்தும் குறித்த பெண்ணின் அருகில் வந்து அமர்ந்துள்ளார்.
பின்னர் தனது லீலைகளை காட்டத்தொடங்கியுள்ளார். அதன் பின் நடந்த து என்ன? காணொளியை பார்வையிடவும்.