உந்துருளிகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் புதன் கிழமை முதல் உந்துருளிகள் தொடர்பான போக்குவரத்து சட்டத்திட்டங்கள் கடுமைப்படுத்தப்படவுள்ளன.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான அனர்த்தங்களில் 332 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே மாதம் வரையான காலப்பகுதியில் 29 லட்சம் உந்துருளிகள் பாதைகளில் பயணித்துள்ளன.
இது மொத்த வாகனங்களில் 53 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.