80 - 90 காலப்பகுதியில் அனைவரதும் மனதை கவர்ந்த நடிகன் நவரச நாயகன் கார்த்திக். 20 வருடங்களுக்கு பின் நாயகனாக களமிறங்கவுள்ளார்.
டி.எம்.ஜெயமுருகன் இயக்கத்தில், தீ இவன் படத்தில் நாயகனாக நடிக்கிறார் கார்த்திக். சுகன்யா, சுமன் உள்ளிட்டோர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். படம் குறித்து, ஜெயமுருகன் கூறுகையில், ''இளம் தலைமுறைக்கு, நம் கலாசாரத்தை கொண்டு சேர்க்கும் படம் இது,'' என்றார்.