நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள ''பரமபதம் விளையாட்டு'' படம் இம்மாதம் 28ம் திகதி வெளிவருகிறது. அதை விளம்பரப்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் நடிகை த்ரிஷா வரவில்லை. இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் டி.சிவா மேடையிலேயே த்ரிஷாவை எச்சரித்துள்ளார்.
இன்று சூழ்நிலை காரணமாக வராமல் போயிருக்கலாம். ஆனால் அடுத்த வாரம் படம் வெளிவருகிறது இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றால் த்ரிஷா வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி தரவேண்டிவரும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எச்சரிக்கிறேன்' என கூறியுள்ளார் டி.சிவா.